மேலும் 250 சாட்சிகளிடம் விசாரிக்க வேண்டியிருப்பதாக அமலாக்கத்துறை கூறியிருக்கும் நிலையில் அந்த விசாரணை இன்னும் தொடங்கவில்லை. எனவே விசாரணை விரைவில் முடிய வாய்ப்பில்லை. சட்டவிரோத பணி பரிவர்த்தனை சட்டத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தாலும், அரசியலமைப்பு 21ல் வழங்கப்பட்டுள்ள தனிமனித சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமைக்கு அவை இடையூறாக இருக்க முடியாது. மேலும், பிஎம்எல்ஏவின் சட்டப்பிரிவு 45ன்படி, மனுதாரர் 60 வயதுக்கு மேற்பட்டவர், நோய்வாய்ப்பட்டவர், குற்றம் செய்யவில்லை என நம்புவதற்கான காரணங்கள் இருப்பதால் அவருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது’’ என கூறி உள்ளார்.