சென்னை: தியாகராயர் நகரில் சிவில் இன்ஜினியரை தாக்கிய பாமக வட்டச் செயலாளரை போலீஸ் வலைவீசி தேடி வருகிறது. குடிபோதையில் பா.ம.க. வட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் தாக்குதல் நடத்தியதாக விஷால் என்பவர் புகார் தெரிவித்துள்ளார். காரை ஓரமாக நிறுத்தி இருந்த சிவில் இன்ஜினியர் விஷாலிடம் வீண் வம்பு இழுத்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. காதில் அடித்ததில் மயங்கி விழுந்த விஷால், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்திவிட்டு தலைமறைவான பாமக வட்டச் செயலாளர் ராதாகிருஷ்ணனை மாம்பலம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.