இனி வைரத்தை பற்றி உலகில் யார் பேசினாலும் சூரத் வர்த்தக மையமும், இந்தியாவும் குறிப்பிடப்படும். சூரத்தின் வைர தொழில்துறை 8 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. இந்த புதிய வர்த்தக மையம் மூலம் மேலும் 1.5 லட்சம் பேர் வேலைவாய்ப்பை பெறுவார்கள். கடந்த 10 ஆண்டுகளில் 10வது இடத்தில் இருந்த இந்தியா உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக உயர்ந்துள்ளதை நீங்கள் அறிவீர்கள். அடுத்ததாக, எனது மூன்றாவது ஆட்சிக் காலத்தில் இந்தியா உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக வளர்ச்சி அடையும்’’ என்றார். மேலும் சூரத்தில் புதிய விமான நிலைய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.