சென்னை: பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக சி.ஏ.ஜி. அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ காப்பீட்டு திட்ட பயனாளிகளில் 7.5 லட்சம் பேருக்கு ஒரேயொரு தொடர்பு எண் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. 7,49,820 பயனாளிகள் 9999999999 என்ற ஒரே எண்ணை கொடுத்துள்ளதாக மக்களவையில் நேற்று தாக்கலான சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.