தண்டவாளத்தில் சிறுநீர் கழித்த பிளஸ் 1 மாணவன் ரயில் மோதி சாவு

கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் ஆடுதுறை அருகே உள்ள கஞ்சான் மேட்டுதெருவை சேர்ந்தவர் ஆசைத்தம்பி. கூலித்தொழிலாளி. இவரது மகன் ராகுல்(16). இவர் ஆவணியாபுரம் தனியார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.நேற்று மதியம் சாப்பிடுவதற்காக பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்த ராகுல், சாப்பிட்டு முடித்துவிட்டு மீண்டும் பள்ளிக்கு சென்றார். வழியில் ரயில்வே தண்டவாளத்தில் சிறுநீர் கழிப்பதற்கு சென்றார். அப்போது கோவையில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த ஜனசதாப்தி ரயில் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்த ராகுல் மீது மோதியது. இதில் ராகுல் உடல்சிதறி அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.ரயில்வே போலீசார் ராகுலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு