பிளஸ்1 மாணவி பாலியல் பலாத்காரம் போக்சோவில் கூலி தொழிலாளி கைது

கடலூர்: கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (54), கூலி தொழிலாளி. வெளிநாட்டில் வேலை செய்து வந்த இவர் அவரது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை பார்ப்பதற்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில் கடந்த 6ம்தேதி அவரது தாயார் இறந்து விட்டார். அன்றே அவரது இறுதி சடங்குகள் முடிந்தன. இதனிடைய மறுநாள் (7ம்தேதி) இரவு அப்பகுதியை சேர்ந்த 16வயதுள்ள பிளஸ் 1 மாணவி அங்குள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க சென்றுள்ளார்.

அப்போது செல்வம் மாணவியிடம் எனக்கு பீடி வாங்கிக் கொண்டு வா என காசு கொடுத்ததாக கூறப்படுகிறது. அவரும் கடைக்கு சென்று மளிகை பொருட்கள் வாங்கிக் கொண்டு செல்வத்திற்கும் பீடியை வாங்கிக்கொண்டு வந்துள்ளார். பீடியை செல்வத்திடம் கொடுத்தபோது எதிர்பாராதவிதமாக மாணவியின் கையை பிடித்து இழுத்து வாயைப் பொத்தி அருகில் உள்ள கருவக்காட்டுக்கு தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் ஆவினங்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து செல்வத்தை நேற்று கைது செய்தனர்.

Related posts

வடமாநில ஏ.டி.எம். கொள்ளை கும்பலை மடக்கிப் பிடித்த நாமக்கல் மாவட்ட காவல் துறையினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி; களமிறங்குவார்களா சுப்மன் கில், ரிஷப் பண்ட்!

சென்னையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் இயக்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு