அப்போது அனுமதி பெறுவது எளிமையாக இருந்தது. பள்ளிக்கல்வித் துறையின் கீழ் பிளே ஸ்கூல்கள் வந்த பிறகு, பிளே ஸ்கூல் நடத்தும் கட்டிடத்துக்கு உரிமையாளருடன் 15 ஆண்டுகள் ஒப்பந்தம் வேண்டும் என்பது உட்பட பல்வேறு விதிகள் கடுமையாக்கப்பட்டன. எனவே, பிளே ஸ்கூல் தொடர்பான தனியார் பள்ளிகள் (வரைமுறைகள்) சட்டம் 2018ன் பிரிவுகளையும் மற்றும் தனியார் பள்ளிகள் (வரைமுறைகள்) 2023 விதிகளையும் செயல்படுத்த தடை விதிக்க வேண்டும். பிளே ஸ்கூல்களை மூடவோ, மூடுமாறு தொந்தரவு செய்யவோ கூடாது என உத்தரவிட வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், எல்.விக்டோரியா கவுரி ஆகியோர், தமிழ்நாட்டில் பிளே ஸ்கூல் தொடர்பான 2023ம் ஆண்டின் புதிய விதிமுறைகளை அமல்படுத்த இடைக்கால தடை விதித்தனர். மேலும் மனுவிற்கு அரசுத் தரப்பில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.