மகனுக்காக விளையாடுகிறேன்: பியூஷ்சாவ்லா நெகிழ்ச்சி

இந்த போட்டியில் மும்பை அணியின் பியூஷ் சாவ்லா 4 ஓவர் வீசி 36 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். வெற்றிக்கு பின் பியூஷ் சாவ்லா கூறுகையில், நடப்பு ஐபிஎல் தொடரை என் மகனுக்காகவே விளையாடி வருகிறேன். ஏனென்றால் நான் இந்திய அணிக்காக ஆடியபோது, என் மகன் குழந்தையாக இருந்தார். கிரிக்கெட்டை அவரால் அந்த அளவுக்கு புரிந்து கொள்ள முடியவில்லை.

ஆனால் இப்போது அப்படியல்ல. கிரிக்கெட்டை நன்றாக புரிந்துகொள்ள முடிகிறது. என் ஆட்டத்தை தொலைக்காட்சி முன் அமர்ந்து பார்க்கிறான். ஒவ்வொரு ஆட்டம் முடிவடைந்த பின்னரும், எனது பந்துவீச்சை இருவரும் சேர்ந்து ரிவ்யூ செய்து வருகிறோம்’’ என்றார்.

Related posts

முதல்வர் மு.க.ஸ்டாலினால் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியிலும் நிறைவேற்றப்பட்டுள்ள முத்தான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு

3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மெட்ராஸ் பார் அசோசியேஷன் சென்னை உயர்நீதிமன்ற புறக்கணிப்பு

பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் தண்ணீர் பிரச்சனை காரணமாக ஏற்பட்ட மோதலில் 4 பேர் சுட்டுக்கொலை