Friday, July 5, 2024
Home » கரூரில் செடி, கொடிகள் வளர்ந்து காணப்படும் அமராவதி ஆறு

கரூரில் செடி, கொடிகள் வளர்ந்து காணப்படும் அமராவதி ஆறு

by Lakshmipathi

*விரைந்து அகற்ற விவசாயிகள் கோரிக்கை

கரூர் : கரூர் அமராவதி ஆற்றில் அதிகளவு வளர்ந்துள்ள செடி, கொடிகளை விரைந்து அகற்ற தேவையான நடவடிக்கைகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருப்பூர் மாவட்ட பகுதியில் இருந்து அமராவதி ஆறு கரூர் மாநகரம் வழியாக திருமுக்கூடலூர் வழியாக செல்லும் காவிரி ஆற்றில் கலக்கிறது. இதில், கரூர் மாநகரில் சின்னாண்டாங்கோயில், படிக்கட்டுத்துறை, லைட்ஹவுஸ் கார்னர், பசுபதிபாளையம் ஆகிய பகுதிகளின் வழியாக ஆறு செல்கிறது.

இந்நிலையில், மாநகரத்தின் வழியாக செல்லும் அமராவதி ஆற்றின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே அதிகளவு செடி,கொடிகள் அதிகமாக வளர்ந்துள்ளன. இவை, ஆற்றில் தண்ணீர் வரும் சமயங்களில் தண்ணீரின் போக்கை மாற்றும் திறன் கொண்டதாக உள்ளது. அமராவதி ஆற்றில் படர்ந்துள்ள இந்த செடிகளை அவ்வப்போது அகற்ற வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி, கரூர் மாநகரின் வழியாக பயணிக்கும் அமராவதி ஆற்றில் படர்ந்துள்ள செடி, கொடிகளை விரைந்து அகற்ற தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You may also like

Leave a Comment

2 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi