திருப்பூர்: திருப்பூர் அருகே ஆலை விரிவாக்கப்பணி அனுமதிக்காக ரூ.2.30 லட்சம் பெற்ற ஊத்துக்குளி ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டார். ரூ.6 லட்சம் லஞ்சம் கேட்டு ரூ.2.30 லட்சம் பணத்தை பெற்றபோது ஆனந்தை போலீசார் கைது செய்தனர். ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து ஆனந்தை கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.