சென்னை: ஓமனில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் புகைபிடித்த ஓமன் நாட்டைச் சேர்ந்த பெண் பயணி கைது செய்யப்பட்டார். பாதுகாப்பு விதிமுறைகளை மீறி விமானத்துக்குள் புகைபிடித்ததுடன் ஓமன் பயணி ரகளையில் ஈடுபட்டுள்ளார். சக பயணிகள், ஊழியர்கள் கண்டித்தும் விமானத்துக்குள் புகைபிடித்தபடி வந்த பயணியை சென்னையில் கைது செய்தது.