Tuesday, September 24, 2024
Home » வழிபாட்டு தலங்கள் சட்டம் தடையல்ல 32 ஆண்டு கால ஞானவாபி மசூதி வழக்கில் விரைந்து விசாரணை: அலகாபாத் ஐகோர்ட் உத்தரவு

வழிபாட்டு தலங்கள் சட்டம் தடையல்ல 32 ஆண்டு கால ஞானவாபி மசூதி வழக்கில் விரைந்து விசாரணை: அலகாபாத் ஐகோர்ட் உத்தரவு

by Karthik Yash

பிரயாக்ராஜ்: உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் ஞானவாபி மசூதி உள்ளது. இது ஏற்கனவே அங்கிருந்த காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தோ அல்லது அதன் ஒரு பகுதியை இடித்தோ கட்டியதாக கடந்த 1991ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ரோகித் ரஞ்சன் அகர்வால் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘’இந்த வழக்கில் வழிபாட்டு தலங்கள் சட்டம் ஒரு தடையல்ல. அது யாருடைய வழிபாட்டு தலம் என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும். இரு தரப்பிலும் வழக்கு விசாரணையை காலங்கடத்தும் நோக்கமின்றி, விரைந்து விசாரணை நடத்த வேண்டும்,’’ என்று தெரிவித்து 5 மனுக்களை நிராகரித்து உத்தரவிட்டார்.

You may also like

Leave a Comment

3 × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi