பிரயாக்ராஜ்: உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் ஞானவாபி மசூதி உள்ளது. இது ஏற்கனவே அங்கிருந்த காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தோ அல்லது அதன் ஒரு பகுதியை இடித்தோ கட்டியதாக கடந்த 1991ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ரோகித் ரஞ்சன் அகர்வால் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘’இந்த வழக்கில் வழிபாட்டு தலங்கள் சட்டம் ஒரு தடையல்ல. அது யாருடைய வழிபாட்டு தலம் என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும். இரு தரப்பிலும் வழக்கு விசாரணையை காலங்கடத்தும் நோக்கமின்றி, விரைந்து விசாரணை நடத்த வேண்டும்,’’ என்று தெரிவித்து 5 மனுக்களை நிராகரித்து உத்தரவிட்டார்.