இந்தோனேசியாவில் உலக திருநங்கை அழகி போட்டி தமிழகத்தை சேர்ந்த திருநங்கைக்கு 3ம் இடம்

சென்னை: இந்தோனேசியாவில் நடந்த உலக திருநங்கை அழகி போட்டியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த திருநங்கை இந்தியா சார்பில் கலந்து கொண்டு, உலகளவில் 3வது இடத்தை பிடித்துள்ளார். உலக திருநங்கைகளுக்கான அழகிப்போட்டி இந்தோனேசியா நாட்டில் நடந்தது. இதில் இந்தியா சார்பில் தமிழகத்தை சேர்ந்த பிராசி என்ற திருநங்கை பங்கேற்று, உலகளவில் 3 வது இடத்தை பிடித்தார். சென்னை திரும்பிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின்பு விமான நிலையத்தில் திருநங்கை பிராசி செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தோனேசியாவில் உலக திருநங்கைகள் அழகிப்போட்டியில், நான் 3வது திருநங்கை அழகியாக தேர்வு செய்யப்பட்டேன். இதன்மூலம் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளேன். முதலமைச்சரை நேரில் சந்திக்க விருப்பம் உள்ளது. வாய்ப்பு கிடைத்தால் சந்தித்து பேசுவேன்.

Related posts

திருச்சூரில் இருந்து வந்த ஏடிஎம் கொள்ளையர்கள் வெப்படை அருகே பிடிபட்ட பரபரப்பு காட்சி வெளியானது!

மராட்டிய சட்டப்பேரவைக்கு நவம்பர் மாதம் 26-ம் தேதிக்குள் தேர்தல்!

கொடைக்கானலில் தடையை மீறி டிஜே நிகழ்ச்சி; தனியார் விடுதியின் அரங்கத்துக்கு சீல்!