திருட சென்ற இடத்தில் தகராறு வாலிபர் தலையில் கல்லை போட்டு கொன்ற நண்பர்

திருப்பூர்: திருட சென்ற இடத்தில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டார். திருப்பூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் பாண்டி (45). ரயில்வே கூட் செட் மேலாளர். இவரது உறவினரின் வே பிரிட்ஜ், வளம் ரோடு அருகே உள்ளது. 5 ஆண்டுகளாக செயல்படாததால் அங்கிருந்த பொருட்கள் திருடப்பட்டு வந்தது. கடந்த 16ம் தேதி வே பிரிட்ஜ் அருகே 3 நபர்கள் சந்தேகப்படும்படி நடமாடுவதாக தகவலறிந்து பாண்டி, கூட்செட்டில் வேலை செய்யும் சிலரை அழைத்து கொண்டு அங்கு சென்றார்.

அப்போது வே பிரிட்ஜில் இருந்த பழைய பொருட்களை உடுமலையை சேர்ந்த ஏழுமலை (42), திருப்பூரை சேர்ந்த சதீஷ் (38), ஜீவா (41) ஆகிய 3 பேரும் திருடிக் கொண்டிருந்தனர். இதில் ஜீவா தப்பி ஓடிவிட்டார். ஏழுமலையை பிடித்து பாண்டி மற்றும் அவருடன் வந்தவர்கள் தாக்கிவிட்டு சென்றனர். சதீஷ் ஒன்றும் தெரியாதது போல அங்கு படுத்து விட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஏழுமலை அவரது தலையில் கல்லை தூக்கி போட்டுள்ளார். இதில், படுகாயம் அடைந்தவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதையடுத்து திருப்பூர் வடக்கு போலீசார் கொலை வழக்கு பதிந்து ஏழுமலையை கைது செய்தனர்.

Related posts

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது

தி.மலையில் பக்தர்கள் அலைமோதல்; அண்ணாமலையார் கோயிலில் 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம்