தேவையானவை
புழுங்கல் அரிசி, பச்சரிசி – தலா 2 கப்
உளுந்து – 1/2 கப்
பாசிப்பருப்பு, வெந்தயம் – தலா 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவைக்கு.
செய்முறை
புழுங்கல் அரிசி, பச்சரிசி, பாசிப்பருப்பு, வெந்தயம் சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு இட்லி மாவு பதத்திற்கு அரைத்து உப்பு சேர்த்து கலந்துகொள்ளவும். மறுநாள் குழிப்பணியாரச் சட்டியை சூடாக்கி எண்ணெய் விட்டு மாவை ஊற்றி இருபுறமும் வேகவிட்டு எடுத்து காரச்சட்னியுடன் பரிமாறவும்.