டெல்லி: பிப்பர்ஜாய் புயலை தொடர்ந்து குஜராத் மாநிலம் சௌராஷ்ட்ராவிற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவ தெரிவித்துள்ளது. அரபிக்கடலில் போர்பந்தரில் இருந்து 300 கி.மீ தொலைவில் பிப்பர்ஜாய் புயல் நிலைகொண்டுள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.