Sunday, June 30, 2024
Home » பின்னத்தூர் ஊராட்சியில் ‘நம்ம ஊரு சூப்பரு’ திட்ட பணிகள் விறுவிறு

பின்னத்தூர் ஊராட்சியில் ‘நம்ம ஊரு சூப்பரு’ திட்ட பணிகள் விறுவிறு

by Lakshmipathi

முத்துப்பேட்டை : முத்துப்பேட்டை ஒன்றியத்தில் ஊராட்சிகளிலும் “நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் மூலம் தூய்மை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் “நம்ம ஊரு சூப்பரு திட்டம்” என்ற சிறப்பு திட்டத்தை துவக்கி வைத்தார். அதன்படி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் விழிப்புணர்வு செய்யப்பட்டு இந்த திட்டம் சமீபகாலமாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதன்படி முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளிலும் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் “நம்ம ஊரு சூப்பரு” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றியம் முழுவதும் நடத்தப்பட்டது. இந்த சிறப்பு திட்டத்தை முத்துப்பேட்டை ஒன்றியக்குழு தலைவர்கனியமுதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், கலைசெல்வம் ஆகியோர் அந்தந்த பகுதி ஊராட்சி தலைவர்கள் முன்னிலையில் துவக்கி வைத்தனர்.

இதன் மூலம் கிராம, நகர்ப்புற பகுதியில் அனைத்து கல்வி நிறுவனங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு அலுவலகங்கள், பேருந்து நிலையங்கள், பூங்காக்களில் மாபெரும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வீடுதோறும் மக்கும் குப்பை, மக்கா குப்பை என பிரித்தும், நெகிழி ஒழிப்பு உள்ளிட்டவைகளை நாம் கையாள வேண்டும். வீடுதோறும் வந்து ஆய்வு மேற்கொள்ளும் அலுவலர்களுக்கு முழு ஒத்துழைப்பும் நம் பகுதியின் தூய்மைக்கு உங்களுடைய பங்களிப்பும் மிக முக்கியமானதாக இருத்தல் வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பின்னத்தூர் ஊராட்சி சார்பில் நேற்று “நம்ம ஊரு சூப்பரு” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு ஊராட்சி தலைவர் டி.ஜி.ராஜேந்திரன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் கலைசெல்வம் முன்னிலை வகித்தார்.

தொடர்ந்து அரசு பள்ளி, ஊராட்சி மன்ற வளாகம், பஸ் ஸ்டாண்டு, அங்கன்வாடிஇ வாய்கால் பகுதி தெருக்கள் இசிஆர்சாலை, கிராம மெயின் சாலை ஆகிய பகுதியில் ஊராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் நூறுநாள் வேலை வாய்ப்பு திட்ட தொழிலாளர்கள் கொண்டு தூய்மை பணிகள் முழுவீச்சில் நடைபெற்றது.
இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, வட்டார ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரி, ஊராட்சி செயலாளர் முருகானந்தம், ஊக்குவிப்பாளர்கள் ராஜேஸ்வரி, செந்தில்குமாரி மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

20 − 16 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi