இதில், வலது கையில் பிரமிடில் உள்ள கழுகுடன் அமைந்துள்ள கோலை பிடித்தும், இடது கையில் பாம்புகள் உள்ளது போலும், காலடியில் குள்ளநரி உள்ளது போன்று சிலை தத்ரூபமாக அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை, சிற்பக்கலைஞர் முருகன் என்பவர் 8 சிற்பக்கலைஞர்களுடன் ஒன்று சேர்ந்து கடந்த ஓராண்டாக வடிவமைத்து, முழுமையாக முடித்துள்ளார்.
முன்னதாக, முதலில் களிமண், பின்னர் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் ஆகியவை மூலம் மாதிரி சிலை செய்யப்பட்டது. பின்னர், தனித்தனியாக செய்யப்பட்ட பாகங்களை ஒவ்வொன்றாக பொருத்தி 8 அடி அகலமும், 19 அடி உயரத்தில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிலை, விரைவில் அயர்லாந்து நாட்டிற்கு கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட உள்ளது குறிப்பிட்டதக்கது.