அதில், கடந்த 2021ம் ஆண்டு விழுப்புரம் நகராட்சியில் கணினி ஆபரேட்டர் ஒருவருக்கு உதவியாக அங்கு பணியாற்றும் பெண் ஒருவரின் தத்து மகன் வினித் (அதிமுகவில் இளைஞர், இளம்பெண் பாசறை நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார்) என்பவரை உதவிக்கு வைத்திருந்தாராம். அப்போது நகராட்சியிலிருந்து கருவூலத்திற்கு அனுப்பும் வரவு செலவு கணக்கு விவரங்களை அவர் தான் பார்த்தாராம். இதில் அதிகாரிகள், தொழிலாளர்களுக்கு செலுத்தப்படும் பிஎப் பணத்தை கருவூலத்திற்கு செலுத்தாமல் சுருட்டியது தெரியவந்தது.
தற்போது வரை சுமார் ரூ.12 கோடி வரை தொழிலாளர்களின் பிஎப் பணம் மோசடி செய்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து, இதுகுறித்து நகராட்சி ஆணையர் வீரமுத்துகுமார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் நேற்று மாலை வினித்தை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த முறைகேடுகளுக்கு நகராட்சியில் பணியாற்றும் ஊழியர்களும், கருவூல ஊழியர்களும் உடந்தையாக இருந்தார்களா என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.