Wednesday, July 3, 2024
Home » போலி ஆவணங்களை சமர்ப்பித்த விவகாரம் அரசு யோகா கல்லூரி முதல்வருக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்க கோரிய மனு: அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

போலி ஆவணங்களை சமர்ப்பித்த விவகாரம் அரசு யோகா கல்லூரி முதல்வருக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்க கோரிய மனு: அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

by Karthik Yash
Published: Last Updated on

சென்னை: சென்னை யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரியில் முறையற்ற நியமனங்கள் காரணமாக அரசுக்கு ரூ.2 கோடியே 30 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தணிக்கை துறை அறிக்கை அளித்துள்ளதாகக் கூறி, வழக்கறிஞர் புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், சென்னையில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரியில், போலி ஆவணங்களைக் கொடுத்து முதல்வராக பதவி உயர்வு பெற்ற மணவாளனுக்கு எதிராக துறைரீதியான மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்க இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவ இயக்குனர், தமிழக அரசுக்கு கடிதம் எழுதியும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கல்லூரி முதல்வராக மணவாளன் நீடிப்பது பொது நலனுக்கு எதிரானது என்பதால், அவருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என அரசு பிளீடர் முத்துக்குமார் தெரிவித்தார். இதையடுத்து, மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.

You may also like

Leave a Comment

14 − 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi