அமைச்சர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு: ஐகோர்ட்டில் கடும் எதிர்ப்பு!

சென்னை: அமைச்சர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு உகந்தததல்ல என ஐகோர்ட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமைச்சர்கள் சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு எதிராக கோ வாரண்டோ வழக்கு தொடரப்பட்டது. அரசியல் காரணத்துக்காக நீதிமன்றத்தை பயன்படுத்த முடியாது என உதயநிதி தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதம் தெரிவித்தார். ஆதாரங்கள் இல்லாமல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சேகர்பாபு தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜோதி வாதம் தெரிவித்தார்.

 

Related posts

பழனி முருகன் கோயில் மலையடிவார கிரிவலப் பாதையில் தடுப்பு வேலிகள் அமைப்பு

தங்கம் விலையில் மாற்றமில்லை

சென்னை சென்ட்ரலில் கெட்டுப்போன 1500 கிலோ மட்டன் பறிமுதல்