சென்னை: சென்னை அசோக்நகர், கே.கே.நகரில் சாலை ஓரம் உள்ள அம்மா உணவகம், மின்வாரிய பெட்டி, கழிப்பிடங்களை அகற்றக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் வி.பி.ஆர்.மேனன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல். மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ள அம்மா உணவகங்கள், கழிப்பிடங்களை அகற்றக் கோரி வழக்கு. வழக்கில் சென்னை மாநகராட்சி பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.