சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ரமா என்ற பெண், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து கோரிக்கை மனு அளித்த நிலையில், சிறிது நேரத்தில் தான் அளித்த மனு சாலையில் வீசி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். தனியார் நிறுவனங்களில் வாங்கிய கடன்களை கட்ட வழி இல்லாததால், அவற்றை ரத்து செய்ய ஆவண செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.