பெருந்துறை அருகே கள்ளச்சாராயம் காய்ச்சியவர் குண்டர் சட்டத்தில் கைது..!!

ஈரோடு: பெருந்துறை அருகே வரப்பாளையத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சிய மாரிமுத்து என்பவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளச்சாராய வழக்கில் ஜாமினில் வெளியே வந்தவர் மீண்டும் சாராயம் காய்ச்சியதால் 2வது முறை கைது செய்யப்பட்டார். சட்டத்துக்கு புறம்பாக தொடர்ந்து சாராயம் காய்ச்சியதால் மாரிமுத்துவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி. பரிந்துரை செய்தார். மாவட்ட எஸ்.பி. பரிந்துரையை அடுத்து மாரிமுத்துவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஈரோடு ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டார்.

 

Related posts

பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்: SETC மேலாண் இயக்குநர் தகவல்!

வரும் 21ம் தேதி வரை ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட 30 தமிழர்கள் இன்று டெல்லி திரும்புகின்றனர்: தமிழக அரசுக்கு பாராட்டு