Wednesday, October 2, 2024
Home » பெரம்பலூர் அருகே ஒன்றிய அரசின் 100 நாள் வேலை திட்டத்தில் பணிக்கு சென்றவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

பெரம்பலூர் அருகே ஒன்றிய அரசின் 100 நாள் வேலை திட்டத்தில் பணிக்கு சென்றவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

by Francis

பாடாலூர்: பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பொம்மனப்பாடி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் இவர் இன்று காலை ஒன்றிய அரசின் 100 நாள் வேலை திட்டத்திற்கு முத்துலிங்கம் (வயது 67) பதிவு செய்திருந்தார். அதற்காக, பொம்மனப்பாடி – மங்கூன் சாலையில் ஒதுக்கப்ட்ட பகுதிக்கு சென்று வேலை பார்த்தார். அப்போது முத்துலிங்கம் மயங்கி சுருண்டு விழுந்தார்.

அங்கிருந்தவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள செட்டிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு பரிசோரித்த மருத்துவர் அவர் ஏற்கனவே, இறந்து விட்டதாக தெரிவித்தனர். இவருக்கு ஜெயக்கொடி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகள் பிறந்து அவர்களுக்கு திருமணமாகி சென்று விட்டனர். மேலும், இது குறித்து பாடாலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

You may also like

Leave a Comment

2 + seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi