எனவே இக்கணக்கெடுப்பை மேற்கொள்ளும் பொருட்டு மாற்றுத்திறனாளிகளுடன் தொடர்புடைய அரசு துறை ஒருங்கிணைப்பாளர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு தொலைபேசி வாயிலாக விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. கணகெடுப்பு பணியானது செப்டம்பர் 2023 முதல் டிசம்பர் 2023 வரை நடைபெற்று வருகிறது. இத்திட்டமானது மாற்றுத்திறனாளிகளை உள்ளடத்தல், அணுகுதல் மற்றும் வாய்ப்புகள் ஆகிய உதவிகள் அனைத்தும் கடைகோடியில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் சென்றடையும் பொருட்டு இக்கணக்கெடுப்பு பணியானது நடைபெற்று வருகிறது. எனவே மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப உறுப்பினர்கள் இக்கணகெடுப்பு பணிக்கு தங்கள் இல்லம் தேடி வரும் அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி மாற்றுத்திறனாளிகள் விவரங்களை பதிவு செய்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.