மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் முகாம்

சாத்தூர், ஏப்.19: சாத்தூர் வருவாய் கோட்டத்தை சேர்ந்த விருதுநகர், சாத்தூர், வெம்பக்கோட்டை வட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை மற்றும் யூ.டி.ஐ.டி அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் நாளை (20ம் தேதி) நாளை காலை 10 மணி முதல் சாத்தூர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள கே.ஏ.பி திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. முகாமிற்கு சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அனிதா தலைமை வகிக்கிறார். இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கோட்டாட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related posts

நெல்லை- சென்னை வந்தே பாரத்துக்கு திருச்செந்தூரில் இருந்து இணைப்பு ரயில் நாசரேத் வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல்

உடன்குடியில் நாளை வருமுன் காப்போம் திட்ட முகாம்

வேப்பங்காடு பள்ளி ஆண்டுவிழா