திருப்போரூர்: கேளம்பாக்கம் அடுத்த தையூர் ஈஸ்வரன் கோயில் தெருவை சேர்ந்தவர் துரைராஜ். இவரது மனைவி வனிதா (31). இவர், செங்கண்மால் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். கடந்த 2ம்தேதி இரவு 9 மணியளவில் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர், இரவு 10.30 மணியளவில் கேளம்பாக்கம் சென்றுவிட்டு, வீட்டிற்கு திரும்பி வரும்போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்து. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வனிதா, கடையின் உள்ளே சென்று பார்த்தபோது, கடையில் இருந்து ரூ.10 ஆயிரம் பணம் மற்றும் சிகரெட் உள்ளிட்ட பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது.
இதனையடுத்து, கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, தையூர் சின்னமா நகர் பகுதியை சேர்ந்த வீரமணி (19) என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.அப்போது வீரமணி, போலீசாரிடமிருந்து தப்பிக்க முயன்றபோது, அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அப்போது போலீசார், கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட வீரமணியை கேளம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று, அங்கு இளைஞருக்கு சிகிச்கை அளிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார், கைது செய்யப்பட்ட வீரமணியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.