இருப்பினும், எஸ்எஸ்எல்சி தேர்வில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று, மீண்டும் விடாமுயற்சியுடன் படிக்கத்தொடங்கி துணைத்தேர்வில் பங்கேற்றார். இதன் முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில், ஆங்கிலத்தில் 56, அறிவியலில் 70 மதிப்பெண்கள் பெற்றார். இதன் வாயிலாக எஸ்எஸ்எல்சி தேர்ச்சியடைந்த அவர் 236 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தேர்வில் முதல்முறை தோல்வியை சந்தித்தாலும், வெற்றியை எதிர்நோக்கி கனவுடன் படித்து தேர்ச்சியடைந்த அவரை குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்த வெற்றி குறித்து அவர் கூறும்போது, ‘‘குறிப்பிட்ட வயது கடந்தவர்கள் 10ம் வகுப்பு தேர்வு எழுதலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இத்தேர்வில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளேன். மேலும் பிளஸ் 2 பொதுத்தேர்வினையும் எழுத உள்ளேன்’’ என்றார்.