குமரி: கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல நேற்று தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் வருகையால் கடும் சோதனைக்கு பிறகு விவேகானந்தர் மண்டபம் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். செல்போன்கள் மூலம் வீடியோ எடுக்கவும் கேமரா கொண்டு செல்லவும் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.