பெரியார் பல்கலை துணைவேந்தருக்கு பதவி நீட்டிப்பு வழங்குவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும்: அமைச்சர் தகவல்

சென்னை: சட்டப் பேரவையில் சேலம் பெரியார் பல்கலைக்கழக விவகாரம் குறித்து நாகை எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ் எழுப்பிய கேள்விக்கு உயர்க் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அளித்த பதில்: சேலம் பெரியார் பல்கலைக்கழக முறைகேடு விவகாரம் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் முறைகேடுகளில் சிக்கியுள்ள துணைவேந்தர் ஜெகநாதனுடன் தமிழ்நாடு ஆளுநர் எவ்வளவு நட்புடன் இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் மீண்டும் துணைவேந்தராக வருவதற்கான காரியங்களில் ஈடுபடுவதாக தகவல்கள் வருகின்றன. அதை தடுத்து நிறுத்தும் செயலில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.

Related posts

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு