பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் உறுதிமொழி

ஆவடி: பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். ஆவடி மாநகராட்சி மேயர் ஜி.உதயகுமார், ஆணையர் கந்தசாமி தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு சமூக நீதி நாளாக தமிழகம் முழுவதும் அரசு அதிகாரிகள் நாளை உறுதிமொழி ஏற்றனர். அதில், \”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும், யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற பண்பு நெறியையும், எனது வாழ்வியல் வழிமுறைகளாகக் கடைப்பிடிப்பேன்!

சுயமரியாதை ஆளுமைத் திறனும், பகுத்தறிவுப் பார்வையும் கொண்டவையாக செயல்பாடுகள் அமையும்! சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொள்வேன்! மானுடத்தின் மீது பற்றையும் மனிதாபிமானத்தையும் என்றும் போற்றுவேன், சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைத்திட இந்த நாளில் உறுதியேற்கிறேன்’’ என்று அனைவரும் கூறினர்.

இதில் துணை ஆணையர் சங்கரன், மாரிச்செல்வி, உதவி பொறியாளர் சத்தியசீலன், நிர்வாக அலுவலர் இந்திராணி, திலகம், கண்காணிப்பாளர் பாத்திமா, ஆரோக்கிய மேரி மற்றும் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார் தலைமையில் சமூக நீதிநாள் உறுதி மொழியினை அனைத்துதுறை அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர். இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) வெங்கட்ராமன், (தேர்தல்) சத்ய பிரசாத், திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் கற்பகம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தனலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு