சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த பேராசிரியருக்கு பதவி மறுக்கப்பட்டுள்ளதாக ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக பேராசிரியை தனலட்சுமிக்கு பதவி மறுக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. ஆனால், தகுதியும், பணி மூப்பும் இல்லாத வெங்கடேஸ்வரன் என்பவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாததாகும் என தெரிவித்தார்.