சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் மீது நடவடிக்கை: அமைச்சர் ராஜகண்ணப்பன்

சென்னை: சேலம் பெரியார் பல்கலை. பதிவாளரை சஸ்பெண்ட் செய்யாவிடில் துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். சென்னையில் உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், உயர்கல்வித்துறை 2 முறை கடிதம் எழுதியும் பதிவாளர் தங்கவேலுவை துணைவேந்தர் சஸ்பெண்ட் செய்யவில்லை. சென்னை பல்கலை.யில் முறைகேட்டில் ஈடுபட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

 

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது