சேலம்: பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கக் கோரி பல்கலைக்கழக தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் சி.சக்திவேல் காவல்துறையில் மனு அளித்துள்ளார். பட்டமளிப்பு விழாவுக்கு வருபவர்கள் கருப்பு உடை அணியக்கூடாது என போலீஸ் அறிவுறுத்தி உள்ளதாக பதிவாளர் சுற்றறிக்கை வெளியிட்டார். இந்த சுற்றறிக்கை மக்கள், மாணவர்களுக்கு மனவேதனையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது.