சேலம்: சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன் மீது குற்றவியல் நடவடிக்கை தொடர உத்தரவிடப்பட்டுள்ளது. துணைவேந்தர் ஜெகநாதன் மீது குற்றவியல் நடவடிக்கை தொடர தமிழ்நாடு தொழிலாளர் நல ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தொழிலாளர் சட்டத்தின்படி, குற்றமிழைத்தவர் என அரசாணை வெளியிட்டு குற்றவியல் வழக்கு தொடர உத்தரவிடப்பட்டுள்ளது. பெரியார் பல்கலைக்கழக ஊழியர்கள் 4 பேரை சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்ததாக துணைவேந்தர் ஜெகநாதன் மீது புகார் அளிக்கப்பட்டது.