இந்நிலையில், முன்னாள் பதிவாளர் தங்கவேலுவை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி நேற்று காலை பல்கலைக்கழகம் முன்பு அதன் தொழிலாளர் சங்கம் மற்றும் ஆசிரியர் சங்கம் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதற்கு விளக்கம் கேட்டு, பதிவாளர் விஸ்வநாதமூர்த்தி, 33 பேராசிரியர்களுக்கு கடிதம் கொடுத்துள்ளார். இதனிடையே, நேற்று மாலையும் தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்ய கோரி, மீண்டும் போராட்டம் நடைபெற்றது.