சென்னை: பேதமற்ற இடம்தான் மேலான, திருப்தியான இடம்” என பெரியார் கூறியதை சுட்டிக்காட்டி எம்.பி சு.வெங்கடேசன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். நாட்டில் எல்லா துறையிலும் சமதர்மம், சம ஈவு, சமவுடைமை, சம ஆட்சித்தன்மை, சம நோக்கு இருக்க வேண்டும் என்றார் பெரியார். பெரியாரின் 146ஆவது பிறந்தநாளை ஒட்டி மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.