இந்நிலையில் ஆற்றின் கரைகளை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி தமிழக அரசு ஆரணியாற்றின் கரைகளை சீரமைக்க ரூ.23 கோடி நிதி ஒதுக்கியது, அதன்படி ஊத்துக்கோட்டை, தாராட்சி, பாலவாக்கம், பாளேஸ்வரம், பெரியபாளையம், ஆரணி, பெருவாயல், ஏ.என்.குப்பம் ஆகிய பகுதிகளில் கரைகளை சீரமைக்கும் பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. இதை தொடர்ந்து, பெரியபாளையம் ஆரணியாற்றின் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரைகளில் கற்கள் பதிக்கும் பணிகள் நடந்தது. தற்போது இறுதிக்கட்ட பணியாக பொக்லைன் இயந்திரம் மூலம் மண் கொட்டி கரைகளை சீரமைக்கும் பணிகளில் நீர்வளத்துறை அலுவலர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.