திருப்பூர்: ஊத்துக்குளி சாலை, பெரியபாளையத்தில் தனியார் பேருந்து மீது கல்லூரி பேருந்து மோதி மாணவிகள் காயமடைந்துள்ளனர். முன்னால் சென்றுக்கொண்டிருந்த தனியார் பேருந்து மீது கல்லூரி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் காயமடைந்த 10க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.