பெரியகுளத்தில் சாலையை கடக்க முயன்றபோது டூவீலரில் சென்றவர் மீது பஸ் மோதும் வீடியோ வைரல்

*படுகாயமடைந்த வாலிபருக்கு தீவிர சிகிச்சை

பெரியகுளம் : பெரியகுளத்தில் சாலையை கடக்க முயன்ற டூவீலர் மீது பஸ் மோதியதில் வாலிபர் படுகாமயடைந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.மதுரை மாவட்டம், வாடிபட்டியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ்(29). இவர் தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள தனியார் பைனான்ஸ் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

நேற்று பெரியகுளம் – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பங்களாப்பட்டி பிரிவு பகுதியில் டூவீலரில் வந்த ஜெயபிரகாஷ், சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக திண்டுக்கல்லில் இருந்து தேனி நோக்கி சென்ற அரசு பஸ், டூவீலர் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட ஜெயபிரகாஷ் படுகாயமடைந்தார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை சேர்த்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டம்!!

என்றும் எப்போதும் தமிழ்நாட்டின் முன்னேற்றம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் : தமிழ்நாடு அரசு புகழாரம்

மதுரையில் அமைய உள்ள மெட்ரோ ரயில் திட்டம் குறித்து ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள், மெட்ரோ அதிகாரிகள் நேரில் ஆய்வு