தன்னைதானே விளம்பரப்படுத்தும், ஒரு முதிர்ச்சியற்ற, பக்குவமில்லாத அரசியல்வாதிதான் அண்ணாமலை : மாஜி அமைச்சர் பாய்ச்சல்

திண்டுக்கல் அதிமுக வெற்றிக்கு பாஜக தடையாக இருந்ததாக விமர்சித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் பலம் தெரிந்துவிடும் என சாடியுள்ளார்.திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அதிமுக கூட்டத்தில் பேசிய அவர், 2 ஆண்டுகள் கூட அனுபவம் இல்லாத கத்திக்குட்டி அரசியல்வாதி என அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தார்.மேலும் அவர் பேசியதாவது, “அதிமுகவின் வெற்றிக்கு தடையாக இருந்த பாஜக நீக்கப்பட்டுள்ளது. அரசியலில் அனுபவம் இல்லாத கத்துக்குட்டியான அண்ணாமலை கூட்டணியை கூட பாராமல் தலைவர்களை தொடர்ந்து விமர்சித்தார்.

தன்னைதானே விளம்பரப்படுத்தும், ஒரு முதிர்ச்சியற்ற ஒரு பக்குவமில்லாத அரசியல்வாதிதான் அண்ணாமலை. பாஜகவின் கொள்கைகள் மீது அதிமுகவுக்கு எப்போதும் உடன்பாடு இல்லை. அதிமுகவின் தயவு இல்லாமல் பாஜகவால் வெல்ல முடியாது. நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் அண்ணாமலை. ரவுடிகள், கட்டப் பஞ்சாயத்து செய்பவர்கள், கந்துவட்டிக்காரர்கள் தான் பாஜகவில் உள்ளனர். பாஜகவினர் அண்ணாமலையின் ஆட்டம் பாட்டத்தை விரும்பவில்லை. பாஜக எந்த இடத்திலும் டெபாசிட் வாங்காது,” எனத் தெரிவித்துள்ளார். இதனிடையே கூட்டணி முறிவுக்கு பிறகும் பாஜகவை விமர்சிக்க வேண்டாம் என அதிமுகவினருக்கு வாய்மொழி உத்தரவு வழங்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

பாலராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியில் முஸ்லிம்கள் கடைகள் நடத்த ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் எதிர்ப்பு