தன்னைதானே விளம்பரப்படுத்தும், ஒரு முதிர்ச்சியற்ற ஒரு பக்குவமில்லாத அரசியல்வாதிதான் அண்ணாமலை. பாஜகவின் கொள்கைகள் மீது அதிமுகவுக்கு எப்போதும் உடன்பாடு இல்லை. அதிமுகவின் தயவு இல்லாமல் பாஜகவால் வெல்ல முடியாது. நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் அண்ணாமலை. ரவுடிகள், கட்டப் பஞ்சாயத்து செய்பவர்கள், கந்துவட்டிக்காரர்கள் தான் பாஜகவில் உள்ளனர். பாஜகவினர் அண்ணாமலையின் ஆட்டம் பாட்டத்தை விரும்பவில்லை. பாஜக எந்த இடத்திலும் டெபாசிட் வாங்காது,” எனத் தெரிவித்துள்ளார். இதனிடையே கூட்டணி முறிவுக்கு பிறகும் பாஜகவை விமர்சிக்க வேண்டாம் என அதிமுகவினருக்கு வாய்மொழி உத்தரவு வழங்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.