சென்னை: சென்னை பெரம்பூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஏடிஎம் மெஷினை மர்ம நபர்கள் உடைத்து பணத்தை திருட முயற்சி செய்துள்ளனர். பணம் செலுத்தும் டெபாசிட் மெஷினை உடைத்தபோது அலாரம் ஒலித்ததையடுத்து தப்பியோடியவர்களை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.