இதனிடையே படம் முடிந்து வந்தவர்கள் தங்களது வாகனங்கள் சேதம் அடைந்திருப்பது பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின்படி, செம்பியம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பராமரிப்பு தொடர்புடைய யாரும் வராததால் மக்கள் கடும் ஆத்திரம் அடைந்து திரையரங்க நிர்வாகத்திடம் வாக்குவாதம் செய்தனர். அவர்களை போலீசார்சமாதானப்படுத்தினர்.
இதையடுத்து வாகனத்தின் உரிமையாளர்களான மாதவரம் பகுதியை சேர்ந்த ரஜினி (41), மாதவரம் பால் பண்ணை பகுதியை சேர்ந்த மோகன் (39), ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த அறிவழகன் (40), பெரம்பூர் பகுதியை சேர்ந்த அரவிந்த் கார்த்திக் (31), பெரியார் நகர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் கண்ணன் (47), கொளத்தூர் பகுதியை சேர்ந்த தேயா பைசல் (24) ஆகியோர் செம்பியம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.