பெரம்பூர் வணிக வளாகத்தில் உள்ள தியேட்டரில் பயர் எக்ஸிட் பைப் விழுந்து 6 விலையுயர்ந்த கார்கள், ஆட்டோ சேதம்

பெரம்பூர்: பெரம்பூர் பகுதியில் தியேட்டரில் உள்ள பயர் எக்ஸிட் பைப் உடைந்துவிழுந்து பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 6 கார்கள், ஆட்டோ சேதம் அடைந்தது. சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான வணிக வளாகத்தில் திரையரங்கம் இயங்கி வருகிறது. நேற்றிரவு 10 மணியளவில் திரையரங்கில் படம் பார்க்க ஏராளமானோர் வந்திருந்தனர். வணிக வளாகத்தின் கீழ் தளத்தில் உள்ள பயர் எக்ஸிட் பைப் லைன் திடீரென விழுந்து பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 6 கார்கள் மற்றும் ஒரு ஆட்டோ சேதம் அடைந்தது.

இதனிடையே படம் முடிந்து வந்தவர்கள் தங்களது வாகனங்கள் சேதம் அடைந்திருப்பது பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின்படி, செம்பியம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பராமரிப்பு தொடர்புடைய யாரும் வராததால் மக்கள் கடும் ஆத்திரம் அடைந்து திரையரங்க நிர்வாகத்திடம் வாக்குவாதம் செய்தனர். அவர்களை போலீசார்சமாதானப்படுத்தினர்.

இதையடுத்து வாகனத்தின் உரிமையாளர்களான மாதவரம் பகுதியை சேர்ந்த ரஜினி (41), மாதவரம் பால் பண்ணை பகுதியை சேர்ந்த மோகன் (39), ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த அறிவழகன் (40), பெரம்பூர் பகுதியை சேர்ந்த அரவிந்த் கார்த்திக் (31), பெரியார் நகர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் கண்ணன் (47), கொளத்தூர் பகுதியை சேர்ந்த தேயா பைசல் (24) ஆகியோர் செம்பியம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related posts

மாணவிக்கு ஆபாச படம் காண்பித்த ஆசிரியர் கைது..!!

சென்னை உட்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

திருக்கோவிலூர் அருகே கழிவறையை சுத்தம் செய்ய வைத்த விவகாரம்: பள்ளி தலைமை ஆசிரியருக்கு நோட்டீஸ்