இதனையடுத்து, வடக்கு மண்டல போக்குவரத்து துணை கமிஷனர் சரவணன் உத்தரவின்பேரில், பெரம்பூர் நெடுஞ்சாலை பகுதி, பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே உள்ள பகுதி மற்றும் பிபி சாலை பகுதி என 3 இடங்களில் சோலார் மூலம் இயங்கும் சிக்னல் கம்பங்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் விபத்துக்கள் குறைந்து அப்பகுதி வாகன ஓட்டிகள் மற்றும பொதுமக்கள் பாதுகாப்புடன் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து செம்பியம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுடலைமணி கூறுகையில், ‘‘அதிக மக்கள் தொகை மிகுந்த பெரம்பூர் பகுதியில், காலை மற்றும் மாலை வேளையில் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்திற்கு எண்ணற்ற பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பழைய சிக்னல் கம்பங்கள் அகற்றப்பட்டு, சோலார் சிக்னல் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு, இந்த சோலார் சிக்னல் கம்பங்கள் நல்ல வழிகாட்டியாக அமையும். மேலும், பல்வேறு வாகனங்கள் இந்த பகுதியில் தடுப்புகளின் மீது மோதி விபத்த ஏற்படுத்துகின்றன. எனவே, அவற்றை தடுக்கவும் இந்த முறை கையாளப்பட்டுள்ளது. பெரம்பூர் பகுதியில் மாதவரம் நெடுஞ்சாலை பேப்பர் மில்ஸ் சாலை, பல்லவன் சாலை சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் மேலும் சில சோலார் கம்பங்கள் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது,’’ என்றார்.