பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீசெல்லியம்மன் தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் செல்லியம்மன் மற்றும் ஸ்ரீ மேல்நாட்டு பிடாரி அம்மன் எழுந்தருளினர். அதன் பின்னர் மாலை 4.40 மணியளவில் தேரை பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்தனர். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.