பெரம்பலூர் அருகே டூ வீலர் மீது வாகனம் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி

பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே டூ வீலர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 2 பேர் பலியாகினர்.பெரம்பலூர் மாவட்டம் கவுல்பாளையம் கிராமம் முருகன்நகரை சேர்ந்தவர் ராஜா. கொத்தனார். இவரது மகன் நித்திஷ் (14). திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா வெங்கடத்தானூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். இதேகிராமம் மேற்கு தெருவை சேர்ந்த சேகர் மகன் கோகுல் (13). பேரளி அரசு மேல்நிலைப்பள்ளியில் 8ம்வகுப்பு படித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை 11.15 மணியளவில் நித்திஷ், தனது தந்தைக்கு சாப்பாடு கொடுக்க நண்பன் கோகுலுடன் டூ வீலரில் பெரம்பலூர் சென்றார். பின்னர், மீண்டும் அதே டூவீலரில் வீடு திரும்பினர். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தீரன்நகர் ஆர்ச் அருகில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றனர். அப்போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் டூவீலர் மீது ேமாதிவிட்டு நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்றது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 2 பேரையும் அப்பகுதியினர் மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இச்சம்பவம் குறித்து பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். நண்பனை அழைத்துக் கொண்டு தந்தைக்கு சாப்பாடு கொடுக்க சென்று திரும்பும் வழியில் நடந்த எதிர்பாராத விபத்தில் இருவர் பலியான சம்பவம் கவுல்பாளையம் கிராமத்தை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related posts

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

மெட்ரோ 2ம் கட்ட நிதி: ஒன்றிய அரசு விளக்கம்

இணையதள சர்வர் கோளாறு : நாடு முழுவதும் இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவை கடும் பாதிப்பு!!