பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடியில் போலீசார் நடத்திய வாகன தணிக்கையில் 140 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற காரை மறித்து போலீசார் சோதனை நடத்திய போது கஞ்சா சிக்கியது. கடத்தலில் ஈடுபட்ட கும்பலை காருடன் பிடித்து கஞ்சா பொட்டலங்களை மங்களமேடு போலீஸார் பறிமுதல் செய்தனர்.