இதனை தொடர்ந்து தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற, பதிவு பெறாத கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பணியிடத்தில் விபத்து மரணம் அடைந்தால் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.5 லட்சத்திற்கான காசோலையை பயனாளி இறந்தவரின் நியமனதாரர் (மனைவி) ஆ.வசந்தி மற்றும் வாரிசுதாரர்களான ஆ.தனஞ்செழியன், ஆ.பிரபஞ்செழியன் ஆகியோருக்கு அதற்கான ஆணையை மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் வழங்கினார்.
மேலும் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வட்டம் பட்டாபிராம் பகுதியில் வசித்து வரும் ஆரோக்கிய மைக்கல்ராஜ் என்பவர் மத்திய பிரேதசம் மாநிலத்தில் நடைபெறும் தேசிய தர பாரா மேசை பந்து சாம்பியன் போட்டியில் பங்கேற்க மாவட்ட கலெக்டரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.30 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார்.அதேபோல் திருவள்ளுர் மாவட்டம் திருத்தணி வட்டம் சிவாடா கிராமத்தில் வசித்து வரும் முனிகிருஷ்ணன் மனைவி சுனிதா என்பவர் மிக்ஜாம் புயலால் தனது வீடும், தொழிலும் பாதிக்கப்பட்டு உள்ளதால் மீண்டும் தொழில் செய்ய மாவட்ட கலெக்டரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.25 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார்.
இந்த கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) என்.ஓ.சுகபத்ரா, மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார்தனி, துணை ஆட்சியர் சமுக பாதுகாப்பு திட்டம் வி.கணேசன், தொழிவாளர் உதவி ஆணையர் (பொன்னேரி) மு.வரதராஜன், மாற்றுத் திறானாளி நல அலுவலர் சீனிவாசன் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.