மேகாலயாவில் ஆளும் கட்சியுடன் மக்கள் ஜனநாயக கட்சி ஐக்கியம்

ஷில்லாங்: மேகாலயாவில் என்பிபி கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக கான்ராட் சங்மா இருந்து வருகிறார். இந்நிலையில் ஆளும் என்பிபி கட்சியில், மக்கள் ஜனநாயக கட்சி(பிடிஎப்) நேற்று இணைந்தது. இந்த கட்சிக்கு சட்டமன்றத்தில் 2 எம்எல்ஏக்கள் உள்ளனர். பிடிஎப் கட்சி சேர்ந்துள்ளதன் மூலம் 60 உறுப்பினர்களை கொண்ட சட்டமன்றத்தில் ஆளும் கட்சியின் பலம் 28 ஆக உயர்ந்துள்ளது. அசாம் உடனான எல்லை பிரச்னைக்கு தீர்வு மற்றும் அரசியல் சட்டத்தின் 8 வது அட்டவணையில் காசி மொழியை சேர்ப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக என்பிபி கட்சி உறுதி அளித்துள்ளதாக பிடிபி கட்சி செயல் தலைவர் லிங்டோ தெரிவித்தார்.

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை